Wednesday 23 September 2015

மின்துறை 108-க்காக காத்திருக்கும் ‘110’ அறிவிப்புகள்

எஸ்.எஸ்.சுப்ரமணியம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

“மின்மிகை மாநிலம்” “மின்வெட்டே இல்லை” , ‘மின்சார வெட்டு உள்ளதா என்பதை தொட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்கிற வாயளப்புகள் தமிழக சட்டமன்றத்திற்குள் காதை செவிடாக்கும் வகையில் தெறித்து விழுகின்றன. எப்படி மின்மிகை மாநிலமானது? மின்வெட்டு எப்படி அம்மாவின் ஆட்சி வந்ததும் “அடுத்த மாநிலத்திற்கு ஓடிப்போனது” என்று தேடினோம். அம்மாவின் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வந்து விட்டதோ என்ற ஆச்சரியமும் எழுந்தது.
அறிவிப்புகள்
110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த மின்திட்டங்களைப் பட்டியலிட்டோம். 29-3-2012-ல் 5 திட்டங்களை அறிவித்துள்ளார். 3-4-2013ல் ஒரு திட்டத்தையும், 25-4-2013ல் 2 திட்டங்களையும் மொத்தமாக 8 திட்டங்களை அறிவித்துள்ளார். இவற்றின் மொத்த நிறுவுதிறன் 8,500 மெகாவாட்.இந்த நிறுவு திறனில் 1 மெகா வாட் உற்பத்தி கூட இதுவரையிலும் நடக்கவில்லை என்பதும் ஒருவேளை அசுரகதியில் இனிமேல் பணிகள் நடைபெற்றால் கூட 2017-க்கு முன்னர் இந்த திட்டங்களின் மூலம் “ஒரு யூனிட் மின்சாரம் கூட கிடைக்கப்போவதில்லை” என்பதும் ஒருமுறை சொன்னாலும் 110 சதவிகித உண்மை.
29-3-2012-ல் அறிவித்த5 திட்டங்கள்1.
திரவ எரிவாயுவைப் பயன்படுத்தி 500 மெகாவாட் தயாரிக்கும் திட்டம்; எரிவாயு குழாயே பதிக்கப்படவில்லை.2. எண்ணூர் அனல் மின்நிலையம் விரிவாக்கம் : 600 மெகாவாட்டிற்கு 3-6-2009ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதை 660 என்று மாற்றியதால் 24-1-2013ல்தான் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளது.3. உடன்குடி விரிவாக்கத் திட்டம் : எண்ணூரில் நிறுவு திறனைஅதிகரித்ததால் மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி, இங்கு நிறுவு திறனை (2ஒ800 மெகாவாட் என்பதை 2ஒ660 மெகாவாட் என) குறைத்ததால் 14-10-2013ல் கிடைத்த சுற்றுச்சூழல் அனுமதி செல்லாது என்பதால் மீண்டும் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஏன் ஒரிடத்தில் குறைக்கிறார்கள், இன்னொரு இடத்தில் கூட்டுகிறார்கள், அம்மாவிற்கே வெளிச்சம்.4. எண்ணூர் பழைய மின்நிலையத்தை மாற்றும் திட்டம்:சுற்றுச்சூழல் அனுமதி பெற முயற்சிகள் நடைபெறுகின்றன.5. 1600 மெகாவாட் உப்பூர் திட்டம் : நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் இருந்துதான் ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வர வேண்டும், யார் கூறினாலும் 2015-16ல் வரும் வாய்ப்பே இல்லை.இதர திட்டங்களுக்கும் இதே கதிதான். பேனைப் பெருமாளாக்கினார் என்பார்கள். இல்லாத ஒன்றை இமயமலை என்று சொல்ல அதிமுக அரசால் முடிகிறது.
சூரிய ஒளி மூலம் சக்தியா? இருளா?
சூரிய ஒளி மூலம் 3000 மெகாவாட் வந்து பாயுமென்றார்கள். அதில் 10 சதம் என்றால் கூட 300 மெகாவாட் 5 சதவிகிதம் என்றால் கூட 150 மெகாவாட். இதுவரை 107.2 மெகாவாட் உற்பத்தி நடைபெற்றுள்ளது. 5 சதவிகித அரசு என்றால், கோபம் வரும், வேறு. விஷயங்களில் சதவிகிதம் 2 இலக்கத்திற்கு மேல் என்கிறார்கள்.
தொலைநோக்கு திட்டத்தை பின்னோக்கிப் பார்த்தால்
தொலைநோக்கு திட்டம் 2023ல் மார்ச் 2012ல் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 2023ல் 15 லட்சம் கோடி வரும். இதில் 4.5 லட்சம் கோடி மின்சாரத் திட்டங்கள் மூலமே வரும் என்றார். 2023க்குள் உற்பத்தியாக வேண்டிய 20,000 மெகாவாட் மின்சாரத்தில் 5000 மெகாவாட் 2017க்குள் வந்துவிடும் என்றார்கள். ஒருவேளை கூரையைப் பொத்துக் கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம் எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு ஏதாவது சொல்லி வைத்தாரே மகராசி என்று வேண்டுமானால் பாராட்டலாம்.
ரூ.331.54 கோடி வந்துச்சா? வரலயா?
பிள்ளைப் பெருமாள் நல்லூரில் (ஞஞசூ) உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்விநியோகக் கழகம் (கூஹசூழுநுனுஊடீ) மின் கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை 1997ல் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 2001 முதல் 30 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த நிறுவனம் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்துகிறது. வாயுகிடைக்காதபோது நாஃப்தாவை பயன்படுத்தும். நாஃப்தாவிற்கு ஆகும் செலவை நிறுவனம் ஓராண்டிற்குள் கூஹசூழுநுனுஊடீவிடம் கேட்டுப் பெற வேண்டும். இது ஒப்பந்த ஷரத்து. இனி என்ன நடந்தது என்பதை சிஏஜி வார்த்தைகளில் கேட்கலாம்.“ஞஞசூ நிறுவனம் 2001-02 முதல் 2009-10 வரையிலான கணக்கை2011 வரையிலும், 2010-11 வரையிலான கணக்கை 2011 செப்டம்பரிலும் சமர்ப்பித்தது.”இதன் தொடர்பாக எங்கள் கருத்து;ஞஞசூ நிறுவனம் ஓராண்டிற்குள் கணக்கு சமர்ப்பித்து கூடுதல் பணம் எவ்வளவு என்று கோரவில்லை.2006-07 முதல் 2010-11 வரையிலான காலத்தில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட நாஃப்தா 11,20,634 மெட்ரிக் டன்கள். ஆனால் ஞஞசூ கோரியபடி 12,01,569 மெட்ரிக் டன்கள் நாஃப்தாவிற்கு கூஹசூழுநுனுஊடீ பணம் கொடுத்துள்ளது. இப்படி பயன்படுத்தாத 80,935 மெட்ரிக் டன் நாஃப்தாவுக்கு கூஹசூழுநுனுஊடீகூடுதலாக கொடுத்த தொகை ரூ.331.54 கோடி.இதுதான் வழக்கம் என்று ஞஞசூ நிறுவனம் கூறுகிறது. ஆனால், ஒப்பந்தப்படி இது கூடுதல் தொகை. இதுகுறித்து 2012 ஆகஸ்டில் அரசிடம் கேட்டிருந்தோம். 2012 டிசம்பர் வரை பதிலில்லை.(15.5.2013 அன்று சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட சிஏஜி அறிக்கை பக்-88-89)அதன் பிறகேனும் ஏதாவது நடந்ததா?
ரூ.254 கோடி இழப்பு முடிந்ததா? தொடர்கிறதா?
2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூஹசூழுநுனுஊடீ வேண்டுகோளின்படி தமிழக அரசு ஓர் ஆணை வெளியிட்டது. தமிழகத்தில் தனியார்உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதும் கூஹசூழுநுனுஊடீ-விற்கு அல்லது தமிழகத்தில் உயர்அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் உள்ளது. இதனடிப்படையில் தனியார் நிறுவனங்களுடன் கூஹசூழுநுனுஊடீ ஒப்பந்தமும் செய்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.836-க்கு என்று கொள்முதல் செய்து வந்தது.திடீரென ஆகஸ்ட் 2010ல் ரிலையன்ஸ் எனர்ஜி ட்ரேடிங் லிமிடெட், பவர் டிரேடிங் கதரப்பரேஷன்,இந்தியா லிமிடெட் மற்றும் டாடா பவர் டிரேடிங் கம்பெனி லிமிடெட் ஆகியோருடன் கூஹசூழுநுனுஊடீ மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதேநேரம் தமிழக தனியார் உற்பத்தியாளர்களிடம் செய்து கொண்ட மின்கொள்முதல் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இந்த நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை பவர் டிரேடிங் மற்றும் டாடா நிறுவனத்திற்கு விற்றனர். இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கிய மொத்த மின்சார அளவான 189.4 கோடி யூனிட்டில் 158.7 கோடி யூனிட் தமிழக தனியார் நிறுவனங்கள் உற்பத்திசெய்தது. நேரடி கொள்முதலில் ஒரு யூனிட்டை ரூ.3.836க்கு வாங்கிய மின்சாரத்தை மேற்கண்ட இரண்டு கம்பெனிகளிடமிருந்து ரூ.4.74 முதல் ரூ.6.75 வரை வாங்கினார்கள். இதனால் வாரியத்திற்கு இழப்பு ரூ.254.05 கோடி (12-8-2014ல் சட்டமன்றத்தில் வைக்கப் பட்ட ஊஹழு அறிக்கை பக். 52-53)
விவசாயிகளுக்கு மின் இணைப்பு: சொல்லுவோம் ஆனா..?
தமிழகம் முழுவதும் 2003 வரை விவசாய மின் இணைப்பு கோரி 4,23,596 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். 31.3.2014 வரைதயார் நிலையில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 47,728 ஆகும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட அரசாங்கம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கும் இலக்கு என்பது 40,000 ஆகும். ஆனால், 1.4.2014 முதல் 31.12.2014 வரை வழங்கியுள்ள மின் இணைப்புகளோ 5,124 மட்டுமே.
Thanks to Theekkathir

Thursday 2 April 2015

லஞ்சம் தராவிட்டால் ஒரு பைலும் அசையாது ( தீக்கதிர் செய்தி )


ஷாக் அடிக்க வைக்கும் மின்துறை அமைச்சகம்

லஞ்ச ஊழல் பெருத்துவிட்டது, கோடி கோடியாய் மக்கள் சொத்தை கொள்ளையடித்து குடும்பச் சொத்தாக மாற்றினார்கள் என்று முந்தைய அரசை பார்த்து கூப்பாடு போட்டு ஆட்சியில் அமர்ந்த அதிமுக... மின்துறை அமைச்சரின் அதிகார அத்துமீறலும் வானளாவிய வசூல் வேட்டையும் கண்டால் இந்த நாடே அதிர்ந்து போகும்... மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய அரசிடம் குறைகளோடு பணத்தையும் கட்டுக்கட்டாக கொடுக்கவேண்டும். அப்போது தான் குறைகள் ஓரளவாவது களையப்படும்.
மின்வாரியத்தில் ரூ.93,000 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது. இந்த நட்டம் யாரால் ஏற்பட்டது என்று தலைமை தணிக்கை அதிகாரி (ஊஹழு) தணிக்கை செய்தால் நிச்சயம் பல பெரிய புள்ளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். இது தோண்டத் தோண்ட ஊழல் சுரங்கம் போல் ஊழல் வந்து கொண்டே இருக்கும். எ ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து தலைமைப் பொறியாளர் பதவியை வாங்கும் நிலைஎ பல லட்சம் ரூபாய் கொடுத்து மேற்பார்வை பொறியாளர் மாறும் நிலைஎ மின் வாரியத்தில் பதவி உயர்வுகளில் வாரிய விதிமுறைகள் கிடையாது.
மந்திரி சிபாரிசுக் கடிதம் இல்லாமல் எதுவும் நடக்காது. வாரிய அதிகாரிகளோ பொம்மைகளாக ஆட்டிப்படைக்கின்றார்கள். வாரியத்தின் 8, 9, 10 வது தளங்களில் மந்திரி சிபாரிசுக் கடிதங்கள் இல்லாத கோப்புகளே கிடையாது. இதற்காக நிரந்தரமான அரசியல் தரகர்கள் அமைச்சகத்தால் ‘நியமிக்கப்படுகிறார்கள்’. அதிகாரிகள் வாரம் இரண்டு முறை அமைச்சரின் நேரடி ஒப்புதலை பெற வேண்டி இருக்கின்றது. இது என்ன மின்வாரியமா அல்லது அமைச்சரின் கம்பெனியா என்று கேட்கும் அளவுக்கு நாற்றமடிக்கிறது வாரியம்... மின்துறை அமைச்சரின் வசூல் வேட்டை இத்தோடு நிற்க வில்லையாம்.
எ குறிப்பிட்ட வணிக வளாகங்கள், 50 வீடுகள் உள்ள தொகுப்பு வீடுகள், அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் அமைச்சரின் ஒப்புதல் தேவை. அவரின் கடைக்கண் பார்வை விழ வேண்டும். அவருக்கு உரிய பங்கு சேர வேண்டும். இவைகள் நடந்தால்தான் சாதாரண மின் இணைப்பு கிடைக்குமாம்.எ தாம்பரம் நியூ காலனி பிரிவில் 250 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளதாம், குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லையாம்,
மின் இணைப்புக் கோரி வாரியத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சென்றால் கோட்டைக்குச் செல் என்று உத்தரவாம். கடந்த பல மாதங்களாக மின் விளக்குகள் ஏந்தி மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்பட காடா விளக்கில் வாழ்க்கையை நடத்துகிறார்களாம்.எ குரோம்பேட்டை, சோழவரம் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ் விண்ணப்பம் அளித்து 6 மாதம் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. காரணம் அமைச்சர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லையாம். வீடு கட்டிய ஞசடிஅடிவடிசள வாரியத் தலைவரை சந்தித்த பிறகும் பயன் இல்லையாம். அமைச்சர் தலையீடு என்றதும் வாரியத் தலைவர் வாய்மூடி மௌனமானார்.சென்ற ஆட்சி சரியில்லை என்று இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னால் லஞ்சமும், ஊழலும் வழக்கம் போல பேயாட்டம் ஆடுகின்றது. மாநில னுஏஹஊ துறை விசாரிக்குமா? முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?- நமது சிறப்பு நிருபர்

Monday 16 March 2015

மின் ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம்

திருப்பூர்,
மின் ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் கிளை மாநாடு
logo
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருப்பூர் கிளை மாநாடு திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாநாட்டுக்கு திருப்பூர் கிளை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கோவை மண்டல தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்து பேசினார். திருப்பூர் கிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் செயலாளர் அறிக்கையை வாசித்தார். வரவு–செலவு அறிக்கையை பொருளாளர் ராமலிங்கம் படித்தார்.
பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்செல்வன், ஓய்வு பெற்றோர் நல அலுவலர் சங்கத்தின் அச்சுதன், சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார். முடிவில் அவினாசி செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
புதிய பென்சன் திட்டம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மின் உற்பத்தி திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மின்சார சட்டம் 2003–ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். புதிய அலுவலகங்களில் அனைத்து பிரிவுகளுக்கும் பகுதி நேர பணியாளர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் திருப்பூர், அவினாசி, காங்கயம், பல்லடம், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த அனைத்து மின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.



Friday 26 September 2014

தனியாரிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தினாலே போதும் கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது: கே.விஜயன்

திருவள்ளூர், செப். 25 -
தமிழக அரசு தனியார் அனல் மின்நிலையங்களில் இருந்து கூடுதல்விலை கொடுத்து மின்சாரம் வாங் குவதை நிறுத்தினாலே கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது என்று மின் ஊழியர் மத்திய அமைப் பின் முன்னாள் தலைவர் கே.விஜயன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியது வருமாறு: தமிழக மின் வாரியத் திற்கு 6805 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் மின் கட்டணத்தை 15முதல் 17 சதவிகிதம் வரை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஏழை நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற் படாது என தமிழக முதல் வர் ஜெயலலிதா தெரிவித் துள்ளார். எனினும் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர மக்கள் இந்த மின் கட்டண உயர்வால் பாதிப்புக்கு உள் ளாகும் அபாயம் உள்ளது.
இந்த மின்கட்டண உயர் விற்கு காரணம் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியதால் வெளிமாநி லங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் நிலக் கரி இறக்குமதி செய்வதற்கு கூடுதலாக செலவாகிறது. இதனை சரிகட்ட கட்ட ணத்தை உயர்த்தும் மின்வா ரியம் தனியார் அனல்மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய் கொடுத்து வாங்குவதை மறு பரிசீலனை செய்திருந்தாலே தற்போது மின் கட்ட ணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டிருக்காது என பல் வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.