புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக் கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில
அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி, இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, அரசு போக்குவரத்து, மின்சாரம்,ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:
மத்திய அரசு ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாக பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் புதிய பென்ஷன் திட் டத்தை கொண்டு வந்துள்ளது. இம்மசோ தாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக் கும் நடவடிக்கையை இக்கூட்டம் வன் மையாகக் கண்டிக்கிறது.